மழை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் என்க்கு இந்த சீரியல் நாயகிகள் மாதிரி நை நை என்று அழுது புலம்பினால் பிடிக்காது.
பின் எப்படி.???... இரவில் பெய்யவேண்டும். ???...மின்சாரம் இருக்கக்கூடாது.???...அண்டம் கிடுகிடுக்க, ....ஆகாசம் நடுநடுங்க.....மேகம் குடைபிடிக்க......மின்னல் கொடிபிடிக்க....சடசடவென்று பெய்யும் பாருங்கள். ....அதுதான் மழை....இதெல்லாம் அபூர்வமாகத்தான் நமக்குக்கிடைக்கும்.
அம்மன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரம்யாகிருஸ்ணன் தாண்டவம் ஆடுவாரே. அதுபோல் கற்பனை செய்துகொண்டு பாருங்கள். அதுமாதிரி இயற்கையின் கோபநாட்டியத்தை ரசித்திருக்கிறீர்களா?......
அது என்ன்வோ தெரியவில்லை. என்க்கு முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் மழை பெய்த நாளாகவே இருக்கிறது......இரண்டை மட்டும் சொல்கிரேன்.இவ்வள்வு நேரம் கவிதையாகப்பேசிவிட்டு வேதாளம் முருங்கைமரம் ஏறுகிரதே என்று நினைக்காதீர்கள். எனக்கு நோ செண்டிமேண்ட்ஸ்...... நோ மூடநம்பிக்கை..... இருந்தாலும் சில விசித்திரங்கள் .... எனக்கு ஏற்படுகின்றன.
என் அன்பிற்குரிய அப்பா பக்கவாத்த்தால் பாதிக்கப்பட்டிருந்தார். கோபியில் இருக்கும் என் கணவரின் நண்பர்வீட்டுக்கு நாலைந்துநண்பர்கள் குடும்பத்தோடு செல்வதாக ஏற்பாடு. அப்பொதெல்லாம் செல்போன் இல்லை. ஏதோ உள்ளுணர்வில் என் தம்பி மனைவியிடம் அந்த நண்பரின் வீட்டு தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு சென்றோம்.
இரவு எட்டுமணிக்குத்தான் காரில் கிளம்பினோம். மழை வரும் அறிகுறி எதுவும் இல்லை. செங்கப்பள்ளி தாண்டிணோம். எங்கிருந்துதான் வ்ந்த்தோ? அப்ப்டி ஒரு பேய்மழை. கணவரால் வண்டி ஓட்டவே முடியவில்லை. ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டோம்.சிறிது ஓய்ந்த்தும் வண்டியை எடுத்து கொஞசதூரம்தான் போனோம். மறுபடியும் மழை. இப்போது வைப்ரேட்டரும் வேலை செய்யவில்லை.
நான், “வீட்டுக்கே திரும்பிவிடலாம்” என்றேன். அவரா பின்வாங்குவார்?....எங்கள் பன்னிரண்டு வயது மகனை உள்ளிருந்தே கைகளால் எட்டியவாறே துணியால் துடைத்துவிடச்சொன்னார். இவர் வலதுபுறம் துடைத்துக்கொண்டே வண்டி ஓட்டினார். பயத்துடனேயே பயணம் செய்தேன்.30மைல் போக 2மணிநேரம் ஆனது. காலையில் போன் வந்தது.” அப்பா இறந்துவிட்டார். ...... தூக்கத்திலேயே உயிர் பிரிந்ததது”....என்று.
அந்த நாளை என்னால் மறக்கவேமுடியாது. எது அன்று எங்களை போகவிடாமல் தடுத்தது. ???.
அடுத்தது...... என் உறவினர் திருமணம், சிவன்மலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து.இரவெல்லாம் அடைமழை. விடிய விடிய பெய்கிறது. கரண்ட் இல்லை. ஹீட்டர் இல்லாமல் , லைட் இல்லாமல் இருபது பேர் குளித்து விடிகாலை மூன்றுமணிக்கு கிளம்புவதற்குள் போதும் போதுமேன்று ஆகிவிட்டது.வேனில்தான் சென்றோம். விடிகாலை ஐந்தரை மணி. கோயிலுக்குள் நுழைந்த்தும் அங்கேயும் கரண்ட் போய்விட்டது. அன்று முப்பதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.உள்ளே பிரகாரத்தைச் சுற்றிலும் ஹோமம் வளர்ப்பதற்காக செங்கற்கள் கூட்டி வைக்கப்பட்டிருந்தன.
எங்க போய் ஹோமம் வள்ர்க்கிறது. கும்பல் பூரா கோயிலுக்குள் பேய்முழி முழித்துக்கொண்டிருந்த்து. எங்கள் ஐயரைத்தேடினோம். நல்ல்வேளை. எங்களுக்கு பிள்ளையாருக்குமுன் சிறுஇடம் நனையாதவகையில் ஏற்பாடு செய்திருந்தார். லேட்டாக வந்த உறவினர்கள் எல்லாம் அவரவர் கல்யாண ஜோடியைத்தேடி அலைந்தார்கள். ஒரே அல்லோலகல்லோலம்தான். சரி. மழை நிற்பதாகத்தெரியவில்லை. சிறிது குறைந்ததும் அவரவ்ர் இடத்தில் போய் தாலி கட்டுங்கள் என்று சொல்லிவிட்டர்கள். முகூர்த்தநேரம் தாண்டிவிடுமே......... மரத்தடியில், வெளிப்பிரகாரத்தில் என்று மழையில் நனைந்து கொண்டே தாலி....... கட்டினார்கள்......?????தாலிகட்டிகோண்டவர்கள் அதை மற்க்கவே மறக்கமாட்டார்கள். ........இது எப்படி இருக்கு.......
ஸ்ஸ்ஸ்ஸ்.......அப்ப்பாடா..... கண்ணைக் கட்டுதா?..... படிக்கிற உங்களுக்கே இப்படியிருந்தால், ஸ்பாட்டில் இருந்த எங்களுக்கு எப்படி இருந்திருக்கும். எதுவும் நம் கையில் இல்லை..........திருமண நாள் 1.11.1998 ....... அந்த நாள் .....அந்த இடம்.... பங்குகொண்ட பாக்கியசாலிகள் யாராவது இருக்கிறீர்களா.
மக்கள் அதிகாரம் | இரண்டாவது மாவட்ட மாநாடு | கோவை
3 hours ago