ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Thursday, April 29, 2010

நீயும் நானும்...










மவுனத்தின் அணிகலனாய் நான்

அதிர வைக்கும் பட்டாசாக நீ

கவிதையும் கன்வுமாய்வானில் சிறகடிக்கும் நான்

அழுத்தமாய் தரையில் ஊன்றி நிற்கும் நீ

எதுவும் வேண்டாத்துறவியாய் நான்

ஆயிரம் ஆசைகளுடன் நீ

இலக்கற்ற சோம்பலுடன் நான்

ஓய்வே இல்லாத நீ

தொட்டாற்சிணுங்கியாய் நான்

எதற்கும் கலங்காத நீ

ஆனாலும் என்னுயிர் என்கிறாய் நீ

உன்னுயிர் என்கிறேன் நான்

எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது இப்படித்தானோ...

ஊசியும் நூலுமாய் ஓடுகிறது வாழ்க்கை அழகாக..


டிஸ்கி: நாங்களும்ம்ம்....கெளம்பிட்ட்டோமில்ல.....






































































Thursday, April 22, 2010

சிரிக்க மட்டும்...

சிரிங்க...சிரிங்க.....

(பொருத்துக.)

  1...“ஒல்லுக்கு ஒரு பக்கம் இடி.....மத்தளத்திற்கு இருபக்கம் இடி”...(மன்மோகன்சிங்)

  2. “முன்னாடி போனா கடிக்குது...பின்னாடி போனா உதைக்குது”....(கலைஞர்)

  3. “ஆப்பசைத்த குரங்கு”.....(நித்தியானந்தா)

  4. “ஆடிய ஆட்டம் என்ன?....பேசிய வார்த்தை என்ன?”.....(சசிதரூர், லலித்மோடி)

 
  5. “எதைதின்றால் பித்தம் தெளியும்”....(வை.கோ)...

  6.”தூங்குன மணியகாரரை எழுப்பினா
  
      பழைய கந்தாயம் எல்லாம் கேட்பார்”......(பா.ம.க.ராம்தஸ்).

  7”திண்ணை எப்போ காலியாகும்”............(ஐ.பி.எல்...பிரச்சினகள்).

  8.”என் வழி....தனி வழி.”....(விஜயகாந்த்)..

9”நடக்குமென்பார்....நடக்காது...நடக்காதென்பார்..

     ந்டந்துவிடும்”....(ரஜினிகாந்த்)


  சரியான விடை எழுதுவோருக்கு எங்கூர் டூரிங் டாக்கீசில் “வேட்டைக்காரன் படத்துக்கு கடைசிக்காட்சி...கடைசி டிக்கெட் பரிசாக வழங்கப்படும்”

  டிஸ்கி: வெயில் ரொம்ப அதிகம்...அதான் இப்படி..