மவுனத்தின் அணிகலனாய் நான்
அதிர வைக்கும் பட்டாசாக நீ
கவிதையும் கன்வுமாய்வானில் சிறகடிக்கும் நான்
அழுத்தமாய் தரையில் ஊன்றி நிற்கும் நீ
எதுவும் வேண்டாத்துறவியாய் நான்
ஆயிரம் ஆசைகளுடன் நீ
இலக்கற்ற சோம்பலுடன் நான்
ஓய்வே இல்லாத நீ
தொட்டாற்சிணுங்கியாய் நான்
எதற்கும் கலங்காத நீ
ஆனாலும் என்னுயிர் என்கிறாய் நீ
உன்னுயிர் என்கிறேன் நான்
எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது இப்படித்தானோ...
ஊசியும் நூலுமாய் ஓடுகிறது வாழ்க்கை அழகாக..
டிஸ்கி: நாங்களும்ம்ம்....கெளம்பிட்ட்டோமில்ல.....
அதிர வைக்கும் பட்டாசாக நீ
கவிதையும் கன்வுமாய்வானில் சிறகடிக்கும் நான்
அழுத்தமாய் தரையில் ஊன்றி நிற்கும் நீ
எதுவும் வேண்டாத்துறவியாய் நான்
ஆயிரம் ஆசைகளுடன் நீ
இலக்கற்ற சோம்பலுடன் நான்
ஓய்வே இல்லாத நீ
தொட்டாற்சிணுங்கியாய் நான்
எதற்கும் கலங்காத நீ
ஆனாலும் என்னுயிர் என்கிறாய் நீ
உன்னுயிர் என்கிறேன் நான்
எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது இப்படித்தானோ...
ஊசியும் நூலுமாய் ஓடுகிறது வாழ்க்கை அழகாக..
டிஸ்கி: நாங்களும்ம்ம்....கெளம்பிட்ட்டோமில்ல.....