பங்காரு அடிகளாரின் சக்தி பீடமும் அவருடைய அருள்வாக்கைப்பற்றியும் அங்குவரும் பெண் பெண்பகதர்களின் பக்தியைப் பற்றியும் நான் இங்கு சொல்லவில்லை.அவருக்கு துதிபாடவும் நான் வரவில்லை.....அவரின்மிகப்பெரும் வெற்றிக்குக் காரணம் பெண்களின் மீது விதிக்கப்பட்டிருந்த சில தடைகளை உடைத்ததும்,...பெண்கள் சக்தியும்தான் காரணம் என்பேன்......
சுமார் முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் மிகவும் எளிமையாக இருந்த இயக்கம் , ஆதிபராசக்தி கோயில் இன்று கல்லூரிகளாக விரிவானது முதல், காங்கிரஸ் மேடையில். ராஜீவ் காந்தியோடு அமரவைக்கப்பட்டதுவரை அவரின் மிகபெரும் வெற்றிகளுக்கெல்லாம் காரணம் பெண்கள்தான் என்பதை அவரே மறுக்கமாட்டார்.
இன்றுகாலை அருகில் உள்ள காய்கறிக்கடைக்குச்சென்றேன்.ரோட்டோரப்பெட்டிக்கடை அது. வண்ணம் அடிக்கப்பட்டு முன்புறம் சாணம் கொண்டு மெழுகி பளிச்சென்று இருந்த்து.கடைக்காரபெண் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்... அந்தப்பெண் மருவத்தூர் செல்ல சக்தி மாலை அணிந்திருந்தார். பார்க்கவே சந்தோசமாக இருந்த்து. ஒரு காலத்தில் அந்தப்பெண்ணிடம் பலர் காய்கறி வாங்கவே தயங்கிய காலம் ஒன்று இருந்த்து. இன்று அந்தப்பெண் எந்தப்பாகுபாடும் இல்லாமல்கருவறைவரை சென்று கடவுளைத் தொட்டு வணஙகுகிறாள் என்றால்அதற்குக் காரணம் பங்காரு அடிகளார்தான்.
பெரியார் போன்று பல சான்றோர் ஏற்றிவைத்த ஜோதி இன்று மென்மேலும் பிரகாசிக்கிறது என்றால், இன்று பங்காரு அடிகளார் மூலம் கடவுளின் பேர் கொண்டு இன்னும் கொஞசம் பெண்ணியக்கதவுகளைத் திறந்து விட்டது என்பதில் எனக்குக் கொஞசம் மகிழ்ச்சி. கடவுள் இல்லை என்ற பெரியார் பிறந்த ஈரோட்டிலேயே,வருடாவருடம் செவ்வாடைப்பெண்கள் பேரணி ஈரோட்டை கலக்குவதைப் பார்த்திருப்பீர்கள். இது எப்படி சாத்தியமாச்சு..பெண்களின் கடவுள் பக்தி என்ற அம்சத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் அடிகளார்.இதுதான் அவர் வெற்றிக்குக் காரணம்.
வீட்டிலேயே மாதவிலக்கன்று காலகாலமாக தள்ளிவைக்கப்பட்டு எதையும் தொடக்கூடாது என்று ஒதுக்கிவைகப்பட்ட பெண்..... இன்று எந்த நாளாக இருந்தாலும்மருவத்தூர் வரலாம்,..... கடவுளை தொட்டு பூஜை செய்யலாம் .....என்று சொன்னதும் எங்கூருப்பெண்கள் மத்தியில் பெரும் சந்தோசம் ஏற்பட்டது என்று சொல்லலாம். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்தந்த ஊர் மாரியம்மன் கோவில்களில் ஒரு சிறிய இடத்தில் பராசக்தி படத்தைவைத்து பூஜை செய்வார்கள். இன்று அதன் பிரம்மாணடமான வள்ர்ச்சி பிரம்மிக்கவைக்கிறது.
ஏங்க தெரியாமத்தான் கேட்கிறேன். நம் உடலிலிருந்து வெளியேறும் சிறுநீர். மலம் போன்று .....பெண்களுக்கு,.... மாதவிலக்கும் இயற்கையாகவோ அல்லது கடவுளாலோ படைக்கப்பட்டதுதானே, பெண்கள் என்ன எங்களுக்கு வேண்டும் வேண்டும் என்று கொடி பிடித்து வேண்டி விரும்பிப் பெற்றுக் கொண்டார்களா, என்ன..... அந்த சமயங்களில் படும் உடல்வேதனை, வெளியில் செல்லும்போது ஏற்படும் அசவுகரியங்கள், நாடாளும் ராணியாக இருந்தாலும் சரி(ஹிலாரி கிளிண்டனாக இருந்தாலு ம், எங்கூரு கருப்பாயாளாக இருந்தாலும்),,,...அவங்கவளுக்குத்தான் தெரியும்.....வேதனை.....
. போன வருடம் உறவினர்மகள் பெரியவள் ஆனாள். அப்போது அண்டை வீட்டுப்பெண்களும், உறவினர்களும் வந்து மஞ்சள் நீர் ஊற்றினார்கள். அவர்கள் வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் ஒரே பணியாள். அந்த வீட்டுப் பெண்மணியும் வந்து நீர் ஊற்றினார்கள். அதன்பிறகு அவர் வீட்டிற்குச் சென்ற அந்த அம்மணி செய்த முதல் வேலை. 1. குளித்துவிட்டு வீட்டிற்குள் சென்றது. 2. பணியாளைக் கூப்பிட்டு ஒருவாரத்திற்கு என் வீட்டிற்கு வேலைக்கு வராதே. என்று சொன்னது....அந்தவீடு தீட்டு வீடாம். பணிபெண் அந்த தீட்டை அவர்கள்வீட்டில் இருந்து மூட்டை கட்டிகொண்டு போய் இவங்க வீட்டில் ஒட்ட வைத்துவிடுவாளாம்.....பின்பு அதை அழிக்க்முடியாதாம்.......வீடெல்லாம் தினமும் கழுவணுமாம்.... இது எப்படி இருக்குது...........அந்தப்பணிபெண் ஒரு வாரத்திற்கு அவர்களிடம் இருந்து விடுதலை கிடைத்த்து என்று சந்தோசப்பட்டது வேறு விசயம்.
மறுபடியும் நான் சொல்லிகொள்கிறேன். நான் அந்தக்கோயிலுக்கு ஒருமுறைதான் போயிருக்கிறேன். (எதையும் ஒருமுறை அது எப்படி என்று தெரிந்து கொள்வது என் பழக்கம்)
எனக்கு அடிகளாரிடம் மரியாதை வரக் காரணம், இருபது வருடங்களுக்கு முன்னால்எங்கள் உறவினர் ஒரு பெரியவர், ....அவரின் மருமகன் இறந்துவிட்டார். மகள் மீது அதீதப்பாசம் கொண்ட அந்தப்பெரியவரால் சம்பிரதாயப்படி மகளுக்கு வெள்ளை ஆடை தந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உறவினர்களைத் தடுத்துவிட்டார்.
அடுத்து அவர் செய்ததுதான் இன்றும் பெருமைக்குரிய விசயம்.மூன்றாவது நாள் பங்காரு அடிகளாரை வரவழைத்து தன் மகளுக்கு செவ்வாடை அணிவித்து என்மகள் சக்தியின் அம்சம் என்று அறிவிக்கச் செய்தார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் எங்கூர்ப்பெண் விதவைகள் வெள்ளை ஆடையிலிருந்து மெல்ல மெல்ல காவி போன்ர வெளிர் ஆடைகள், இன்று எப்போதும் போல் வண்ண ஆடைகள் உடுத்த்தத் தொடங்கினார்கள்.
தந்தை பெரியாரால் பல வகைகளில் போராட்டங்கள் மூலமும் மேடைபேச்சுக்கள் மூலமும் பேசப்பட்ட பெண்ணியம், அவரின் கடவுள் மறுப்பால் தயங்கியிருந்த பெண்கள், அவர் சொல்வது எல்லாம் ஆண்களுக்கு மட்டும்தான் போல என்று, ஒதுங்கியிருந்த பெண்கள்இன்று அடிகளாரின் கடவுள் பெயரால் கொஞசமாவது உடைத்துக்கொண்டு வெளியேவந்திருக்கிறார்கள் என்றால் இத்ற்கு ஒரு அடிகளாரும், கடவுள் பக்தியும் தேவைப்பட்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்.
. நமக்கு நாமே பூட்டிகொண்ட பல விலங்குகளை உடைக்க இன்னும் யாரெல்லாம் வரவேண்டியிருக்குமோ..
டிஸ்கி: இதனால் தெரிவது என்னவெறால்
தாய்க்குலங்களின் ஆதரவு இருந்தால் எங்கேயும் ஜெயிக்கலாம்......
அது திரைப்படமாக இருந்தாலும் சரி,,,,தேர்தலாக இருந்தாலும் சரி......இது எக்ஸ்ட்ரா பாயிண்ட்.....நோட் த பாயிண்ட்.யுவர் ஆனர்....
சாணக்கியன் 158
4 hours ago