ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Sunday, February 21, 2010

மழைக்கெடா.

எங்கள் விட்டுக்கு அருகில் உள்ள நண்பர் வீட்டில் இரவில் கெடாவிருந்து.அழைப்பு வந்த்து எங்களுக்கும், கணவரின் சக அலுவல்ருக்கும். அவர் என் கணவரின் தொழில் போட்டியாளர்.இருந்தாலும் நெருங்கிய நண்பர்கள்.என் கணவருக்கு ரெகுலர் கஸ்டமர்கள் அதிகம். ரொமப நாட்களாக தொழில் செய்பவர். என்ன செய்தாலும் எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களிடம்தான் வருவார்கள். அந்தக்காண்டு...என் கணவரின் நண்பருக்கு.....


என்ன செய்தார் தெரியுமா....




அவர் பத்திரிக்கைகளில் எல்லாம் எழுதுவார். அவர் ஒரு கதையில் என் கணவர் பேரை வில்லனுக்கு வைத்து ஊர் பேரோடு போட்டு வெளியிட்டார். குங்குமத்தில் வெளிவந்தது. என் கணவர் அதைப்பார்த்துவிட்டு சிரித்துவிட்டார். ஆனால் விசயம் அதொடு போகவில்லை. அந்தப்பேரில் அந்த ஊர் முக்கியஸ்தர் ஒருவரும் இருந்தார். அவர் உடனே தன் படைபரிவாரங்களோடு கிளம்பிவந்து அந்த நண்பரை ஒரு பிடிபிடித்துவிட்டார். முழிமுழியென்று முழித்துப்போனார் பார்ட்டி....அப்புறம் என்ன.... என் கணவரிடம் சரண்டர். “ அய்யா.... அவர் எழுதியது என்னைப்பற்றித்தான். உங்களை இல்லை” என்று மணிககணக்கில் பஞ்சாயத்துப்பேசி அனுப்பி வைத்தார். இப்படி அடிக்கடி நடக்கும். ஏதாவது ஏடாகூடமாக செய்து வம்பில் மாட்டிக்கொள்வார்.


கதைக்கு வாங்க. நண்பர் பத்து நாட்கள் வெளியூர் போய்விட்டார். அவர் அலுவலகத்துக்கும் விருந்து நடைபெறும் வீட்டிற்கும் நடுவில் ஒரு வேலியும் அதில் ஒரு படல் வைத்து வழி உள்ளது.நண்பர் அந்த வழியாகத்தான் அந்த வீட்டுக்குச் செல்வார். வீட்டுக்காரர்கள் அதில் கழிவறை கட்டுவதற்காக 8அடிஆழம்6அடி அகலத்தில் கிணறு மாதிரி வெட்டி வைத்திருந்தார்கள். அது அவருக்குத்தெரியாது.

அப்போதுதான் முதல் பந்தி ஆரம்பித்தது. இலையில் கை வைத்தோம். சடசடவென்று மழை. கரண்ட் போய்விட்டது. மெழுகுவர்த்தி தேடி எடுப்பதற்குள் “ டொம்” “ ஆ அய்யொ அம்மா” என்று ஒரு அலறல்.

அவ்வள்வுதான், “யாரோ விழுந்துவிட்டார்கள்” என்று ஒரே கூக்குரல். எல்லோரும் எழுந்துவிட்டோம்......”சார்தான் விழுதுவிட்டார்” என்று அடுத்த சத்தம். என்க்கு கதிகலங்கிவிட்டது. அழுதுகொண்டே இருட்டுக்குள் என் இரண்டு வய்துக்குழந்தையோடு ஓடினேன்.

ஆனால் விழுந்தது கதைப்பார்ட்டி....... அழுகையை நான் நிறுத்திக்கொள்ள, அவர் மனைவி தொடர்ந்தார்.....அவர் குழி இருப்பது தெரியாமல் வேலியைதிறந்து காலை வைக்கவும், கரண்ட் போகவும்....... ஒரே லக..லக..லகதான்.

மழையோ கொட்டுகிறது. ஏணி ஒன்றை உள்ளேவிட்டார்கள். ஏறமுடியவில்லை. கால் முறிந்துவிட்டது. பாவம் துடித்துப்போய்விட்டார் மனிதர்.........நான்குபேர்கள் உள்ளே ஒரு கட்டிலோடு இறங்கி மேலே தூக்கிப்போட்டார்கள்.

அப்புறம் என்ன? ஆஸ்பத்திரிதான். மாவுக்கட்டுதான். அவர் மனைவியோடு நானும் ஈரோடு போய் நடுராத்திரி இரண்டு மணிக்கு பசியோடு திரும்பி வந்தால் இங்கே எல்லாம் சுத்தம். கழுவி கமுத்தி வைத்துவிட்டார்கள்.

விழுந்தது அவர்கள் வீட்டில். விழுந்தது எங்கள் நண்பர் ஆனதால் நாங்கள் கூட்டிப்போனோம். ந்ம் வீட்டில் விழுந்தவர்களை ந்மக்குப்பதிலாக் கூட்டிப்போனார்களே. எதாவது எடுத்து வைப்போம் என்று நினைத்தார்களா?...அவர்கள் ஜாம்..ஜாமென்று விருந்து போட்டு அவர்கள் வேலையை முடித்துக்கொண்டார்கள். நாங்கள்தான் சிவபட்டினி. குழந்தைக்கு பழத்தைக்கொடுத்து பசியாற்றினோம்.

“ ஆண்டவன் அன்று அந்த வீட்டு அரிசியில் எங்கள் பேரை எழுதவில்லை போல”

Tuesday, February 9, 2010

நெஞ்சத்தைக் கிள்ளியது..கொஞசம்.........

நெஞ்சத்தக்கிள்ளிவிட்டு விட்டார்...அம்பிகா..வேறென்ன..கொசுவத்திதான்..

நாமெல்லாம் அந்தப்பீரியட் ஆளுகளாச்சே..

பயமறியா வயது....தமிழ்வாத்தியார் வீட்டு சுவற்றில்தான் அணுகுண்டுப்பட்டாசை தம்பி வீசுவான். கோபத்தோடு வெளிவருவார். மறுபடியும் ஒரு குண்டு.... வாத்தியார் மறுபடி வருவாரா என்ன..

அது ஏங்க இந்த தமிழ்வாத்தியார்கள் மட்டும் சாதுவா இருக்காங்க..

பக்கத்துல ஒரு கட்டிடம் வேலை நடந்த்தது. காவலுக்கு இரு பசங்க..கொட்டிக்கிடக்கும் மணலில் குழந்தைகளை விளையாடவிடமாட்டார்கள். விடுவாங்களா நம்ம தெருப்பசங்க.

ஒருநாள் இரவில் அவர்கள் உறங்கியதும் தலைமாட்டில்ஒரு மண்டையோட்டுக்குள் மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றிவைத்துவிட்டு பதுங்க்கிகொண்டார்கள்.

கல்லை எடுத்துவீசி அவர்களை எழுப்பிவிட்டார்கள். விழித்துப்பார்த்துவிட்டு ஓடியவர்கள்தான்.....அடுத்தநாள் வேலைக்கு வரவில்லை....

எங்க டீனேஜ் நாயக, நாயகிகள் யாரு தெரியுமா..நம்ம ரஜினி, கமல், ஸ்ரீதேவிதான்...

எஙகூருக்கெல்லாம் படம் வெளிவந்து மூன்றுவருடம் கழித்துத்தான் வரும்.

அப்ப்டிவெளிவந்து பட்டையைக்கிளப்பிய “16வயதினிலே” படத்த பள்ளித்தேர்வு காரணமாக மிஸ் பண்ணி வருத்தப்பட்டது இன்னும் ஒரு கொசுவத்தி..

அப்போதுதான் இந்த ஒற்றைகல் மூக்குத்தி ஃபேசன் நானும் என் தோழிகளும் வரிசையாகக் குத்திகொண்டோம்.

அப்பல்லாம்  சினிமாவை விட்டால் வேறு பொழுதுபோக்கு இல்லை,

உறவினர் ஒருவர், அவர் மனைவி, அவரின் சகோதரி என் வகுப்புத்தோழி...,தம்பிகள் என்று ஒரு கேங்காகப்போவோம்.

உறவின்ரின் மனைவியும் சகோதரியும் இருக்கிறார்களே. ரொம்ப படத்தில் முழுகிவிடுவார்கள்

கமல்,ஸ்ரீதேவி, நடித்த வாழ்வேமாயம் படத்துக்குப்போனோம்.

ஒருபுறம் சகோதரி.நடுவில்நான்.மறுபுறம் சகோதரி. கடைசி சீனில் வாழ்வே மாயம் என்று பாடிக்கொண்டு கமல் செத்துப்போவாரே.அந்தசீன்...

ஆரம்பிச்சுட்டாங்கப்பா இருவரும் அழுகையை....என் கண்ணைக்குத்தினால்கூட அழமாட்டேன் அப்படிபட்ட என்னிடம்....

ஒருவர்” அய்யோ....நெஞ்செ வெடிக்குதே.....தாங்க முடியலையே”

இன்னொருவர் என் கையை இறுக்கிப்பிடித்துக்கொண்டு கமல் செத்துருவானா” என்று தேம்ப நடுவில் நான் சிக்கிக்கொண்டு அடித்த சீக்கி இருக்கிறதே...யம்மா....அந்த அண்ணாவுக்கு கோபம்.. வந்து தியேட்டரைவிட்டு வெளியில் போய் நின்றுகொண்டார்...

இதுபோதாது என்று  ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஈரோடு போய் ஒரே நாளில் இரண்டுமூன்று படங்கள் பார்ப்போம்.

இந்தப்பார்ட்டிகளோடு சத்யராஜ் பிரபலமான் “நூறாவதுநாள்” படத்துக்குப்போனால் எப்படி இருக்கும்...

சுவற்றுக்குள் இருந்து ஒரு எலும்புக்கூடு நளினியைக்கட்டிப்பிடிக்குமே....அப்ப அந்தக்கா கத்துன கத்தலில் தியேட்டரே எங்களை திரும்பிபார்த்தது, அப்புறம் கணவர் வெளிநடப்பு....இந்தப்படத்துக்கெல்லாம் ஏன் கூட்டிவர்ரீங்கன்னு அர்ச்சனை வேற நடக்கும்.

அப்புறந்தாங்க வேடிக்கை. இந்தப்பயந்தாக்கொல்லிகளை சும்மா விடலாமா..அப்புறம் திங்கற சோறு எப்படி எங்களுக்கெல்லாம்ஜீரணம் ஆகும்....போடு பிளானை....

தினமும் மாலைநேரம் அந்தக்காவும், தோழியும் வருவார்கள்.

. எங்களது ஓட்டுவீடு... ஹாலில் உள்ள மர விட்டத்தில் என்சின்னத்தம்பியை கறுப்பு ஸ்வெட்டர், முகத்தை மறைத்து வெள்ளைத்துணி.சகிதம்.முனி படத்தில் குத்தவைத்து உட்கார்ந்து ராஜ்கிரண் ஒரு போஸ் கொடூப்பாரே. அது மாதிரி கைகளை அசைத்து வா...வா....என்று கூப்பிடுவதுபோல்உட்கார வைக்கப்பட்டான். கதவுக்குப்பின்னால் என் பெரிய தம்பி மெயின் சுவிட்ச் அருகில்..நான் ஹாலில் மறைந்துகொள்வது.

பெண்கள் இருவரும் ஹாலுக்குள் நுழைந்ததும்  மேலேஉட்கார்ந்திருக்கும் தம்பிதான் கண்ணில்படுவான்.உடனே “ஜங்” கென்று அவன் குதிக்க நான் வீல் என்று சவுண்டு கொடுக்க பெரியவன் மின்சாரத்தைப் பிடுங்க....(கதை வசனம், டைரக்சன் யாரு நானாச்சே)..

எல்லாம் பிளான்படிதான் நடந்தது....வந்தார்கள்....பார்த்தார்கள்.....அலறினார்கள்.....ரோட்டுக்கு ஓடினார்கள்....

அவர்கள் “பேய்....பேய்...”.... என்று கத்திய கத்தலில் ரோட்டில் கூடிய கூட்டம்தான் எதிர்பாராத திருப்பம். அப்புறம் அசடு வழிந்துகொண்டேவெளியே நாங்கள் வந்து விளக்கம் கொடுத்தது வேறு கதை..அடடா...எத்தனை சாகசங்கள்...

இப்பல்லாம் இதுமாதிரி பசங்கள் விளையாடுவார்களா........படிப்பத்ற்கே நேரம் போதவில்லையே..ஊம்....அது ஒரு காலம்....கொசுவத்தியை தூண்டிவிட்ட அம்பிகாவுக்கு நன்றி...

அடுத்து கதை சொல்ல அழைப்பது க..பாலாஜி, வால்பையன்,ஆரூரான்,ஹேமா, அமைதிச்சாரல், இயற்கை,,,,வாங்களேன் நேரமிருந்தால்...






Monday, February 1, 2010

சரக்கு நாங்களும் அடிப்பமில்ல....

x
x
x


  • எனக்கொரு பெக்...தம்பிக்கொரு பெக்......பிராந்தி......

ஊற்றிகொடுத்தார் அப்பா.......சர்க்கரை எல்லாம் போட்டு நல்லாத்தான் இருந்துச்சு.....ஒரு மிடறு குடித்துவிட்டேன்....அந்த வாசனை ஏனோ பிடிக்கவில்லை. .ஏதோ சந்தேகத்தில் ( பெங்களூரில் பாரில் புகுந்து பெண்களை எல்லாம் அடித்தார்களே...அதுமாதிரி அடிச்சுப்புடுவாங்க..அப்புறம் குடிகாரின்னு பட்டம் குடுத்திருவாங்களோ.என்று என் மனக்கண்ணில் தெரிந்திருக்குமோ.......ஆமாங்க  இவங்க கவர்ன்மெண்டே டாஸ்மாக் கடை எல்லாம் நடத்துதே.....அங்க குடிக்கிற ஆம்பளகலப்போய் அடிக்கலாமே...)  குடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டேன்.....நம்புங்க சாமி........இப்பெல்லாம் இல்லங்க,,,,சந்தேகமாப் பார்க்காதீங்க....

தம்பி முழுசாக்குடிச்சுட்டான்....அப்புறந்தாங்க வேடிக்கை.....

புல் மப்பு......அங்க ஓடறான். இங்க ஓடறான்....அலமாரியில் ஏறி பாத்திரங்களை எல்லாம் “கேட்ச்” அப்படின்னு வீசறான்.

அடுக்கிவைத்த பேப்பர்களை வாரி வாரி வீசறான்......

பெல்ட் போட்ட டவுசர இழுத்து இழுத்து விட்டுக்கிட்டு.

இஞ்சி தின்ன குரங்கு மாதிரி........ரஜினி படத்துல குட்டியானை ஒண்ணு தண்ணி அடிச்சுட்டூ ரகள பண்ணுமே...அதுமாதிரி.  அட சாமி.......அளும்புன்னா....அளும்புதான்.. அவன் பண்ணியது.......

சிரிச்சு சிரிச்சு எல்லோருக்கும் வயிறே வ்லிச்சுருச்சு, அம்மாவத்தவிர ......

பின்ன வாந்திஎடுத்துட்டு தூங்கினவனைத்திட்டிக்கிட்டே அவங்கதான சுத்தம் பண்ணினாங்க....

வேற ஒண்ணும் இல்லங்க.....எனக்கும் தம்பிக்கும் அப்ப தீராத சளி...பிராந்தி குடுத்தா சரியாப்போயிருமுன்னு.

ஒரு புண்ணியவான் கொடுத்த ஐடியாலதாங்க இந்தக்கூத்து...

எனக்கொரு சந்தேகம்....ஆம்பளப்பசங்க எந்த வயசுல குடிக்க ஆரம்பிக்கிறாங்க....பெரும்பாலும் கல்லூரி போற பருவம் ஆகத்தான் இருக்கும்..

ஆமா இந்த சரக்கில அப்படி என்னதான் இருக்கு.

ஆனா என்ன ஒண்ணு......குடிக்கிற எல்லாருமே அயோக்கியன் இல்ல...குடிக்காதவங்க எல்லாம் யோக்கியனும் இல்ல்...

அதுலயும் இந்த சரக்கு அடிக்கிறவனாவது அடிச்சுட்டு மட்டை ஆய்டறான்.

இந்த சரக்கு அடிக்காத புண்ணியாத்மாக்கள் இருக்காங்களெ....அவங்க விடற சவுண்டு இருக்கே....எஙகூட்டுக்காரர் மாதிரி.....

ஏதாவது எங்கூட வாக்குவாதம் பண்ணி ஜெயிக்க முடியலைன்னு வச்சுக்கங்க........நம்ம கலைஞர் மாதிரி வேறு ஒரு குற்றத்த நம்மமேல சுமத்துவாங்க.......அதோட விடுவாங்களா.....”உனக்கெல்லாம் குடி,சிகரெட்டுன்னு திரியறாங்க பாரு....அவன மாதிரி வாய்ச்சுருக்கணும்....னு...வசனம் பேசுவாங்க....

என்னமோ நமக்காக இதெயெல்லாம் தியாகம் பண்றமாதிரி.....

நாங்களுந்தான்  சரக்க்டிக்கிறதில்ல. சிகரெட் குடிக்கிரதில்ல......நாங்க என்ன சொல்லிக்கிட்டா திரியறோம்....உங்களுக்கெல்லாம் சரக்கடிக்கிற பொண்டாட்டி வாய்ச்சுருக்கணும்...அப்படின்னு....

கல்யாணத்துக்கு முன்னாடி தண்ணி போட்டா பொண்ணு குடுக்கமாட்டாங்கன்னு நல்லகுடி நாச்சி வேசம் போடறது...அப்புறம் உங்களால்தான் பிரச்சின...கவலய மறக்கறதுக்கு தண்ணி போடறேன்னு ஆரம்பிக்கவேண்டியது....

ஏங்க எங்களுக்கெல்லாம் கவலை வராதா.....நாங்கல்லாம் ஆரம்பிச்சோமுன்னா உங்களுக்கெல்லாம் ஒண்ணும் மிச்சமிருக்காது...ஞாபகத்துல வச்சுக்குங்க....
.

எங்க சொந்தக்காரர் ஒருத்தரு.....ரொம்ப நல்லவரு....மனைவி மேல் ரொம்பப்பிரியம்...(ஸ்லேவ்...பார் .....ராஜீ).......அப்ப்டின்னு சைக்கிள்ள பச்சை குத்திட்டு த்திரிஞ்சவரு. ஸ்லேவுன்னா அடிமைன்னு அதுக்கப்புறம்தான் தெரிஞ்சுது..அதிகாலைல குளிச்சு சந்தனமும், சவ்வாதுமாய் நீட்டா இருப்பாரு. நிரந்தர வேலை இல்ல. கிடைத்த வேலைகளைச் செய்வார்.மனைவி சொல்லுக்கு ம்றுவார்த்தை கிடையாது அவ்வளவு பிரியம்..5,7வயதில் 2ஆண்குழந்தைகள்.நேரம் தவறாமல் எல்லா வேலையும் நடக்கும்..

ஆனா இரண்டு மாத்த்திற்கொருமுறை ஒரு ரெண்டுநாளாவது மலையேறிடுவாரு......சரக்குதான் வேறென்ன.....சரக்கு அடிசுட்டா எல்லாம் தலைகீழா மாறிடும்..ஆளத்தேடணும்....எங்கியாவது ரோட்டோரத்திலியோ, சாக்கடை ஓரத்திலியோ விழுந்துகிடப்பார்.அவர் மனைவி கண்ணீரும் கம்பலையுமா எங்கூட்டுக்கு ஓடிவருவாங்க....எந்தம்பியும் அந்தக்காவும் ஆட்டோ எடுத்துட்டுப்போய் வீட்டுக்கு அள்ளிப்போட்டுக்கிட்டு வருவாங்க..அந்த அண்ணாவோட அண்ணந்தம்பிகள் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள்...மானம் போகுது மரியாதை போகுதுன்னு....மனைவிதான் பாவம்.....வேறென்ன.....

அவரின் 5வயதுமகன் ”சாயாயாயம்  குய்ப்பியா....குய்ப்பியா” என்று மழலையில் அவன் அப்பாவை முடியைப்பிடித்துஅடிப்பதையும், அவர் மயக்கத்தில் கிடப்பதையும் பலமுறை பார்த்திருக்கிறேன்.

இவரும் அதிகமா எல்லாம் அடிக்கமாட்டாராம். .ஒரு ரவுண்டிலியே பிளாட் ஆகிவிடுவார்போல. அப்புறம் தண்ணி அடிச்சுட்டு அடுத்தவ்ன்கூட சண்டைபோடறதோ, பொண்டாட்டிய வையறதோ கிடைதாம்.ரோட்டரத்துல மட்டும்தான் படுத்துக்குவாராம். ரொம்ப நல்லவராம்....இப்ப்டிச்சொல்லி அந்தக்கா மனசத் தேத்திக்குவாங்க..

அப்புறம் ஒரு பொறுப்பான அரசு உத்தியோகம் கிடைச்சுது. கொஞசநாள் நல்லா இருந்தார்.அப்புறம் பழைய கதைதான்....அப்புறம் இதெல்லாம் வேலைக்காகாதுன்னு  அந்தக்கா ஒருவழி கண்டுபிடிச்சாங்க...பச்ச வேட்டி கட்டு...பழனிக்கு மாலை போடு ஆறு மாசத்துக்குன்னு......

எல்லாம் மாலை கழுத்துல இருக்குற வரைதான்...அப்புறம் பழய கதைதான்...அப்புறம் அந்தக்கா என்ன செய்வாங்க... ஒரு வாரத்துல வேற்கோயிலுக்கு மாலை போடு....ன்னு ஒரு பதினைந்துவருடம் போராடி பசங்களுக்கு கல்யாணவயசு வயசு வந்திருச்சு...இது தேவையா அப்படின்னு சொல்லிக்கில்லிஇப்ப அந்த பழக்கத்தையே விட்டுட்டாரு. இரண்டு மகன்களும் இன்று நல்ல வேலையில் இருக்கிறார்கள்.

இன்று அந்தக்குடும்பம் நல்ல நிலையில் இருக்கக்காரணம் அந்தப்பெண்ணின் பொறுமையும்,தியாகங்களும்தான்..அந்தப்பழக்கத்தை அவர் விட்டாருன்னா அதுக்குக்காரணம் அவரின் குடும்பப்பாசமும்தான்...

இன்னொரு உறவினர் குடும்பம்...கிராமத்து ஆள்.. மகா முரடர்....5,7வயதில் இரண்டு ஆண்குழந்தைகள்.3வயதில் ஒரு பெண்குழந்தை....மொடாக்குடி.....பின் மனைவியைப்போட்டு அடின்னு ஒரே அதகளம்தான்.பார்த்தார், அந்த அப்பாவிப்பெண் தாங்கமுடியாமல் ஒரு முடிவு எடுத்தார்.இரண்டு ஆண்குழந்தைகளையும் அவர் அம்மாவீட்டில் கொண்டுவிட்டுவிட்டு பெண்குழந்தையை வயிற்றில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துவிட்டார்.இன்றும் என் மனதில் நீங்காத வடு அது....இதில் நான் யோசித்த விசயம்.....

ஆண்குழந்தைகள் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள். ஆனால் பெண்குழந்தைக்கு எந்தக்காலத்திலும் தாயின் உதவி தேவை...அதோடு தன் புருசன் போலவே தன் பெண்ணுக்கும் கிடைத்துவிட்டால் என்ற பயம் ஏற்பட்டிருக்குமோ..அதனால்தான் அந்தப்பெண்குழந்தைக்கு அந்தக்கதியோ.....

அவருக்கென்ன கொஞச நாள் கழித்து வசதி இல்லாத் ஒருபெண்ணை வேறு திருமணம் செய்துகொண்டார் அதுவும் வேறு குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது. தன் குழந்தைகளை பார்த்துக்கொள்வது மட்டுமே என்று...பாவம் அந்தப்பெண் அது அவரின் சூழ்நிலை...

.இந்த இரண்டு குடும்பங்களிலுமே பாதிக்கப்பட்டது பெண்கள்தானே....அந்தக்குடும்பத்த உறவினர்கள் உட்பட ஒருவரும்கண்டுகொள்ளமாட்டார்கள். அந்தக்குடுபத்துத்துக்குழந்தைகளுக்கு குடிகாரனின் பிள்ளைகள் என்ற பட்டம் கிடைக்கும்..அவர்களின் திருமண வயதில் இது பெரும்பிரச்சினையாக இருக்கும்....பிள்ளைகள் எவ்வளவு நல்ல நிலையில் இருந்தாலும் தகப்பன் குடிகாரனாக இருந்தால் அந்த வீட்டில் பெண்னோ, பிள்ளையோ எடுக்கத் தயங்குவார்கள்.....பொண்டாட்டிதான் என்ன்மோ தப்பு பண்ணிட்ட மாதிரி எல்லா இடங்களிலும் தலயக் குத்திட்டு நிப்பாங்க.. அவுருபாட்டுக்கு .சம்பந்தமே இல்லாதமாதிரி போஸ் குடுத்துட்டு இருப்பாங்க.சம்பந்தப்பட்ட அந்தப்பெண்கள் ஸ்டிராங்கா இருந்தாங்கன்னா முதல் குடும்பம் மாதிரி போராடி குழந்தைகுட்டிகளை நல்ல நிலைக்குக் கொண்டு வருவாங்க...இல்லாவிட்டால் இரண்டாவது கதைதான்....எத்தனை பார்க்கிறோம்..அப்புறம் இன்னொண்ணு...இந்த ஆட்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் நல்லதையே சொன்னாலும் சபையேறாது..யாரும் காது கொடுத்துக் கேட்கமாட்டாங்க...மதிக்கவும் மாட்டாங்க....

இதெல்லாம் ஏங்க அந்த ஆட்களுக்குத் தெரிய மாட்டேங்குது.உடல் நலத்தையும் கெடுத்துக்கிட்டு மத்தவங்களையும் தொந்தரவு பண்ணிக்கிட்டு.... யாரோ எப்படியோ போகட்டும் ...நமக்கு பாட்டில் இருந்தா சரி என்ற சுயநல்ம்தானே....அப்படி இருப்பவர்கள் கல்யாணம் செய்துகொள்ளாமல்.விருப்பம் போல  இருக்கலாமே... ஒரு பெண்ணாவது நிம்மதியாக இருப்பாளே.....எல்லா அவமானங்களிலில் இருந்தும் அந்தப்பெண்ணாவது தப்பிப்பாளே.. சிந்தியுங்க சாமி..........

டிஸ்கி: இதுமாதிரி நிறையப்பேருக்கு நேரில் புத்தி சொல்ல ஆசைதான்.....ஆனா அப்புறம் நம்மளப்பார்த்தாலே வில்லியப் பார்த்தமாதிரி தெறிச்சு ஓடிடுவாங்களே....அதனால்தான் இ ந்த மாதிரி.....வேறென்ன செய்ய....