ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Wednesday, July 14, 2010

குழந்தைகள் என்ன வளர்ப்பு மிருகங்களா......

ஒசூரில் இன்று ஒரு15வயது.. பெண்குழந்தை ஈவ் டீசிங் காரணமாக விசம் குடித்துத் தற்கொலை...

பத்துவருடங்களுக்கு முன் நான் கேள்விப்பட்டது..

”ஏழாவதிலிருந்து எட்டாவது செல்லும் பன்னிரண்டு வயது சிறுவன்...”தூக்குப்போட்டு தற்கொலை”......?????


காரணம்...”விளையாட புதுசட்டை அணிந்து செல்லாதே.”...தாய் கண்டித்ததால்............
நம்பமுடிகிறதா....அந்தப்பிஞ்சு மனசில் என்ன குறை....
அவன் குறை ..கேட்க யாருமில்லாமல் போனதா......
.ஒருநாளில் அவன் இந்த முடிவுக்கு வந்திருப்பானா.....அந்தக்குழந்தையின் பிஞ்சு மனசுக்குள் வெடித்த பூகம்பத்திற்கு அந்த ஒரு வார்த்தைதான் காரணமா....தாயின் சின்னக் கண்டிப்புக்கு இப்படி ஒரு விபரீத முடிவா...இந்த மண்ணிலிருந்து உயிர் பிரியும்வரை அந்தப்பெற்றோரின் குற்ற உணர்வு விழிமூட அனுமதிக்குமா......
ஏன் இந்த நிலை.. தவறு யாரிடம்....இந்த அவசர உலகில் குடும்பம்கூட இரண்டாம்பட்சமா..

குழந்தைகளிடம் அன்பு காட்டக்கூட நேரமில்லையா..ஒரேவீட்டிற்குள் தனிதனி தீவுகளாக வாழ்கிறோமா...

 பிள்ளைகள்காலைநேரத்தில் ஏழுமணிகெல்லாம் தயாராகி பள்ளிக்கு செல்கிறார்கள்.. சரியாகப் படிக்கவிலலை என்றால் அங்கு ஆசிரியர்களின் கண்டிப்பு....தண்டிப்பு.. அதே காரணத்தால் வீட்டுக்கு வந்தாலும் பெற்றொரின் கண்டிப்பு..மாலை ஐந்துமணிகோ ஆறுமணிக்கோ வந்தால் வீட்டில் யாராவது இருந்து தேவையானதைக்கொடுத்தால் சாப்பிட்டுவிட்டு, அல்லது ஒருவ்ரும் இல்லாவிட்டால் தானே போட்டு சாப்பிட்டுவிட்டு ட்யூசனுக்கு ஓடுகிறார்கள்...அல்லது தொலைக்காட்சியைப் போட்டு உட்கார்ந்துவிடுகிறார்கள்..அப்பா, அம்மா வந்தபிறகு அவர்கள் என்ன ஏது என்று பார்த்து அவர்களின் தேவைகளை கேட்டு அறிந்து பரிவோடு வழிகாட்டினால் ஒரு பிணைப்பு இருக்கும்...இல்லாவிடில் அந்தக்குழந்தைகளின் உணர்வுகள் திசைமாறிப்போகும்...

குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறோம்...குடும்பத்தின் நிகழ்வுகள் அனைத்தும் அவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்...அதை அவர்களின் வயதுக்கு தகுந்தமாதிரி எடுத்துக்கொள்வார்கள்...சில குழந்தைகள் பெற்றொரின் தவறுகளை கேள்விக்குள்ளாக்குவதும் உண்டு..அதை நேர்மையான முறையில் எதிர்கொள்ளவேண்டும்.இரவு ஒரு வேளையாவது ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு நம் குடுமப்த்தின் கஸ்ட நஸ்டங்களை, மகிழ்வுகளை, பிரச்சினைகளை,தேவைகளை பகிர்ந்துகொள்ளவேண்டும்.. குழந்தைகளுக்கு புரியவைக்கவேண்டும்..

சில வீட்டில் பார்த்திருக்கிறேன்...ஒரு குழந்தைக்கு அதிகம் கவனிப்பும், மற்றதிற்கு ஏச்சும் பேச்சும்....இந்தப்பாரபட்சம்தான் அவர்களை தவறான் முடிவுக்கு கொண்டு செல்கிறது... ஒரே வயிற்றில் பிறந்திருந்தாலும் எல்லாக்குழந்தையும் ஒரே மாதிரி இருக்கிறதா.....அறிவில், தோற்றத்தில், .நிறத்தில் வேறுபட்டுத்தானே இருக்கிறது.....சில குழந்தைகள் கறுப்பாய் இருப்பதாய் ,ஊனமாய் இருப்பதாய், மக்காய் இருப்பதாய் துயரம் கொள்ளும்...பெற்றோர்கள்தான் இதைகவனித்து அவ்ர்களின் வேறுதிறமைகளைச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்.. பெற்றோரே விலக்கினால் அது யாரிடம் சென்று முறையிடும்.....யோசியுங்கள் பெற்றோர்களே....குழந்தைகளை ஆடு என்றால் ஆடவும், பாடு என்றால் பாடவும் நாய்க்குட்டி மாதிரி பழக்கி வைக்கவேண்டுமா...அவ்ர்களுக்கென்று ஒரு ஆசை...விருப்பங்கள் இருக்கக்கூடாதா....... ஆண்குழந்தையோ, பெண்குழந்தையோ யாராக இருந்தாலும்..அவர்கள் வயதுக்குத் தகுந்த பிரச்சினைகள் இருக்கும்;;;;.அதுவும் பெண் குழந்தைகள்  என்றால் சில அந்தரங்கமான விசயங்களை தாயிடமோ அல்லது தோழியிடமோதான் சொல்லமுடியும்...தீர்வையும் பாதுகாப்பையும் தாய்தான் செய்ய முடியும்...

கொஞசம் காதுகொடுங்கள் பெற்றோர்களே....

எதற்குத்தான் இந்த வாழ்க்கை....எத்தனை கோடி கொடுத்தாலும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்தத்துயர் போகுமா..எங்கே செல்கிறது...அவசரமாய் இந்த உலகம்..

புரியாத புதிர்கள் , துயர்கள் வரிசையில் இதுவும் ஒன்று... 

16 comments:

க‌ரிச‌ல்கார‌ன் said...

என்ன‌ செய்வ‌து இந்த‌ அவ‌ச‌ர‌ உல‌கில் எத‌ற்கும் நேர‌மில்லை.

கூட்டுக் குடும்ப‌த்தில் நிறைய‌ உற‌வுக‌ளிருக்கும்.யாரேனும் எப்போதும் குழ‌ந்தைக‌ள் கூட‌ இருப்பார்க‌ள்

இப்ப‌ அதுக்கும் வ‌ழியில்லை...

ராமலக்ஷ்மி said...

அவசியமான இடுகை. நன்று கண்ணகி.

ஹேமா said...

மனசுக்குக் கஸ்டமாயிருக்கு கண்ணகி.இப்படியான நிகழ்ச்சியில் இரு பக்கமுமே சரியும் தவறும் இருக்கலாம்.புரிந்துணர்வுதான் பிரச்சனை !

கண்ணகி said...

நன்றி..கரிசல்காரன்.தனிக்குடித்தனம் என்னும் சுதந்திரத்துக்கு நாம் கொடுக்கும் விலைகள் நிறைய...

கண்ணகி said...

நன்றி..ராமலட்சுமி..

கண்ணகி said...

நன்றி...ஹேமா...குழந்தைகள் பக்குவப்படாதவர்கள்...தவற் யார் மீது இருந்தாலும் அதன் விளைவுகள் பெற்றோருக்குத்தான்..

அம்பிகா said...

மிக அவசியமான பகிர்வு கண்ணகி.

வால்பையன் said...

//குழந்தைகளிடம் அன்பு காட்டக்கூட நேரமில்லையா.//

தான் பெற்றதை தனக்கு அடிமையாக நினைக்கும் சமூகத்திடம் அன்பையா எதிர்பார்க்கிறீர்கள்!

குழந்தை வாயில் ஊட்டுகிறேன் என்று திணிக்க ஆரம்பிப்பதிலிருந்து வளர்ந்து நிற்கும் வரை திணித்து கொண்டே தானே இருக்கிறார்கள்!

ஒன்னு, ரெண்டு என்னை மாதிரி தப்பி போயிருது!

மங்குனி அமைச்சர் said...

நானும் படிச்சேன் , ரொம்ப வருத்தமான விஷயம் , ஈவ் டீசிங் பண்ண அந்த நாயகள ............... வேணாம் அப்புறம் ஏதாவது கெட்ட வார்த்தைல திட்டிர போறேன்

கண்ணகி said...

நன்றி..வால்.. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க..

கண்ணகி said...

போன உயிர் போனதுதானே அமைச்சரே...

'பரிவை' சே.குமார் said...

அவசியமான இடுகை.

Anonymous said...

பல தாய்மார்கள் ,குழந்தைகள் தன் இஸ்டபடி தான் வளர வேண்டும் என நினைக்கிரார்கள்

Anonymous said...

குழந்தைகள் தன் இஸ்டபடிதான் வளர வேண்டும் என தாய்மார்கள் எண்ணுகிறார்கள்

கண்ணகி said...

நன்றி..சே.குமார் கருத்துக்கும் முதல் வருகைக்கும்..

கண்ணகி said...

நன்றி.ஆர்.கே.சதீஸ்குமார்..வருகைக்கும், கருத்துக்கும்.