ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Wednesday, September 8, 2010

கால்நடை மருத்துவருன்னா சும்மாவா...

மருத்துவக்கனவில் இருக்கும் என் உறவினரின் மக்ளுக்கு.சீட்  கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது...அடுத்து என்ன படிப்பது என்ற ஆலோசித்தோம்...அப்போது என் சினேகிதி கால்நடை மருத்துவம் படிக்கலாம்...என்றாள்..

”மாட்டு டாக்டருக்கா” என்று விளையாடுக்குக் கேட்டுவிட்டேன்.....அதென்ன அப்படி ஒரு இளக்காரம்....அவ்ங்களோட மதிப்பு தெரியுமா???....கிராமங்கள்ல்ல போய்ப்பாரு....அவங்களுக்கு இருக்கற மரியாதையை..விவசாயிகள் மனிதர்களைப்ப் போலவே கால்நடைகளையும் மிகவும் நேசிப்பார்கள்....கால்நடைகள் இறந்துவிட்டால் மனிதர்கள் இறந்தால் துக்கம் விசாரிப்பதுபோலவே துக்கம் விசாரிக்கும் பழக்கம் கிராமங்களில் உண்டு...அந்த வாயில்லா ஜீவன்களுக்கு வைத்தியம் பார்ப்பவரை கடவுளைப்போல மதிப்பார்கள்....தெரியுமா...

இங்க பாருடி....காலநடை மருத்துவம் படிச்சவர்தான் K.P.ராமலிங்கம் எம்.பி.....சுனாமி வந்தப்போ கடலூர் கலெக்டரா இருந்தாரே...ராதாகிருஸ்ணன்,I.A.S அப்புறம் எஙகூரு பக்கத்து பெருந்துரைக்காரரு  ராமசாமி..I.A.S இன்னும் எத்தனை ஐ.பி.எஸ் இருக்காங்க தெரியுமா...

ஹியூமன் டாக்டருக்கும், வெட்னரி டாக்டருக்கும் ஒரே மாதிரியான சம்பளம்தான்,..ஒரே கேடர்தான். தெரிஞ்சுக்க..


.பொரிந்து தள்ளிவிட்டாள் என் சினேகிதி..சட்டியில போட்டு வறுத்தெடுக்காத குறையா வறுத்தெடுத்துவிட்டாள்...ஏன்னாஅவங்க ஊட்டுக்காரரு வெட்னரி டாக்டர்...

இவளேதான் “ஒரு சினிமா பார்க்க முடியுதா....மாடு கன்னு போடுல,” “ நஞசு போடுல்லன்னு... தியேட்டர்லயே வந்து பாதியிலேயே கூட்டிட்ட்டுப்போய்டறாங்க”. அத்னாலே சினிமா பார்க்கறதேயே விட்டாச்சுன்னு” ..ன்னு செல்லமா அலுத்துக்குவா...

உண்மையில் எல்லோருமே கால்நடை மருத்துவப்(B.V.Sc.) படிப்பைப்ப்ற்றி ஒரு தவறான கண்ணோட்டத்தில் இருக்கிறார்கள்...அல்லது அதன் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள்..

கால்நடை மருத்துவம் படித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது...வேலைவாய்ப்பு இருக்கிறது...அரசு வேலை சீக்கிரம் கிடைக்கிறது...அப்படிக் கிடைக்கவில்லை என்றால் கூட தனியாக வைத்தியம் செய்யலாம்...அதிலேயே M.V.Sc...., Phd....போன்ற படிப்புகளுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது...ஒரு சாப்ட்வேர் எஞ்சீனியர் வாங்கும் சம்பளத்தை அவ்ர்கள் உள்ளுரீலேயே பெறலாம்...வெளிநாட்டிலும் நல்ல வேலைவாய்ப்பு இருக்கிறது.....

அதிலும் இந்த்த்துறை பெண்களுக்கு மிகவும் ஏற்புடையது....ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்ட பெண் கால்நடை மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்.. சென்னையில எங்கள் தோழி ஒருவர் வெளியூரெல்லாம் விமானத்துல பறந்துபோய் வளர்ப்புப் பிராணிகளுக்கு வைத்தியம் பார்க்கிறார்....

அதுனாலே கால்நடை மருத்துவத்த மிஸ் ப்ண்ணீராதீங்க....இந்த வருடம் கவனத்துல வைங்க...

Sunday, September 5, 2010

ஈரோட்டுப் பெண்களின் அட்டகாசம்...

...

போனவாரம் ஞாயிற்றுக்கிழமை ”அவள்விகடன்” ” ஜாலிடே” ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடந்தது... இந்த மாதிரி விழாவில் நான் இப்போதுதான் முதன்முறையாகக் கலந்து கொண்டேன்...

 காலேஜ் புள்ளைகள்ல்ல இருந்து 70வயசு பாட்டி வரைக்கும் என்ன பாட்டு என்ன டான்சு...ஒரே அமர்க்களம்தான்..நமக்கெல்லாம் மனதளவில் ஒரு கட்டுப்பாட்டுடன் இருந்தே பழகிட்டோமா....அங்க அதெயெல்லம் தூக்கிப்போட்டுட்டு குழந்தைகள் மாதிரி ஆடலும் பாடலும் போட்டிகளும், பரிசுகளுமாக ஒரே சந்தோசம்தான்... ஜட்ஜுகளும் சேர்ந்து ஆடி கலக்கிட்டாஙக...அந்த சூழ்நிலையைப்பர்த்ததும் உண்மையில் எனக்கு  சந்தோசத்துல அழுகையே வந்திருச்சுங்க..

.தொகுப்பாளினி.”அபேக்சா”ன்னு பேர் சொன்னாங்க...பேர் ரொம்பவும் வித்தியாசமா இருக்கில்ல...செம கலக்கல்..தொய்வே இல்லாமல் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி கலகலப்பா வச்சுருந்தாங்க...

அவங்க சொன்னமாதிரியே “வீட்டுக்கவலையெல்லாம் தூக்கிபோட்டு, சமைக்காமல் உட்காரவச்சு லன்ஞ், ஐஸ்கீம், ஸ்நாகஸ்,, காபி,டீ...அட அட.. என்ன உபசரிப்புங்கறீங்க...காலேஞ் பொண்ணுக எல்லாம் தூள் கிளப்பிட்டாங்க...

நானும் ஒரு போட்டியில் இறுதிச்சுற்றுக்கு வந்து கடைசியில சொதப்பிட்டேன்...

எங்கூட்டூக்காரர் ”வாயெல்லாம் ”எங்கிட்டதான்...வெளியில் போனாத்தான தெரியும்” அப்படீன்னுவார்... நம்ம வீரமெல்லாம் மேடையப் பார்த்தா அப்படியே கரைஞ்சிடுது..மேடைபயம் இன்னும் இருக்கிறது...அடுத்த தடவை தோழிகளோடு போய் கலக்கிறலாம்...அப்படின்னு வேற வேலையா முடியறதுக்குள்ளேயே வந்துட்டேன்... 

அடுத்த விழா ஈரோட்டில எப்ப நடக்குமோ....நன்றி....அவள்விகடன்....சி.டி.கிடைச்சா நல்லாருக்கும்...

டிஸ்கி: நான் கலந்துகொண்டது” சவாலே சமாளி”.நிகழ்ச்சி...

கேள்வி: உங்கள் நாத்தனாருக்குத் தெரியக்கூடாத பயங்கர உண்மையை அவ்ர்களிடமே உளறிவிடுகிறீர்கள்....எப்படி சமாளிப்பீங்க.


நண்பர்களே...நீங்கள் சொல்லுங்க.. எப்படி சமாளிப்பீங்க...



Thursday, August 26, 2010

தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடுங்கப்பா...

.
இப்பெல்லாம் எங்கு புறப்பட்டாலும் தண்ணீர் பாட்டில்கள் இல்லாமல் யாரும் கிளம்பறதில்லை....அந்தத்தண்ணீரை யாராவது தாகத்திற்கு கேட்டால்கூட கொஞசம் யோசனையோடு “15ரூபா போட்டு வாங்கிய “அக்வாபீனா”வாச்சே...காசு போட்டு வாங்கலாமில்ல...அல்பம்...அல்பம்...கேட்குதுபாருன்னு தயக்கத்துடன்தான் கொடுப்பாங்க.....நிலமை அப்படி ஆய்ப்போச்சு..

”தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே”...அப்படிம்பாங்க...

மணப்பெண் தேடுவதாக இருந்தாலும் “எதுவும் வேண்டாங்க.....யார் வந்தாலும் முகஞ்சுளிக்காம ஒரு சொம்பு தண்ணீ கொடுக்கிற புள்ளையாப் பாருங்க” என்பார்கள்..

அதெல்லாம் தமிழர் பண்பாடு...அதெல்லாம் மாறிபோச்சு....அந்தப்பண்பாடு, வெங்காயம் எல்லாம் இப்ப .நாம தண்ணி கொண்டுவந்து கொடுத்தாக்கூட “வேண்டாங்க்” என்கிறார்கள்....”சுடுதண்ணீர்தான்” என்று சொன்னபிறகு தயக்கத்துடன் குடிக்கிறார்கள்...

முக்காவாசிப்பேர் வீட்டுல கேன் தண்ணீர்தான்..

இனிமேல் வீட்டுபட்ஜெட்டில் தண்ணீருக்கும் காசு ஒதுக்கணும்போல..

காவிரியிலும் பிரச்சினை....மழையும் பெய்யமாட்டேங்குது....

இது எங்க போய் நிக்கப்போவுதோ...அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும்...என்கிறார்களே...அது நிஜமாகிவிடுமோ...

டிஸ்கி.:பத்து நாளாச்சு..பைப்புல தண்ணி வந்து.... அதனால் வந்த  புலம்பல்..இது.. .


Wednesday, August 18, 2010

திருடிகள் ஜாக்கிரதை....

அய்...விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு வந்திருச்சே...போன வாரம் ஈரோட்ல ஒரு வேலை...

எங்களுக்கு ஈரோடுதான் செல்லம்....சாப்பிங் ஆகட்டும்......ஆஸ்பிட்டல் ஆகட்டும்..எல்லாம் அங்கேதான்...போகும்போது ஒரு லிஸ்டே இருக்கும்..

அன்னிக்கும் அப்ப்டித்தான்...மிக்ஸி ரிப்பேருக்கு கொடுக்க கையில் கனத்துடன்...ஒரு பிக் சாப்பரில் உட்கார்ந்திருந்தது.....அதாங்க...கட்டப்பையின்னுவாங்களே அதுதான்..

அப்பத்தான் வூட்டுக்கடன் பணத்த வங்கியில கட்டிவிட்டு காலியான்..??? பெரிய கேஸ்பேக்கும் அதில் செலவுக்கு கொஞசம் பணம்...ஒரு செல்போன்..அவ்வள்வுதான் இருப்பு...

இரண்டு பெண்கள் பயர்சர்வீசில் ஏறினார்கள்...என்னருகே ஒருத்தி நின்று கொண்டாள்...என் பை இருவருக்கும் நடுவிலிருந்தது...ஏனோ சரியாக நிற்காமல் நெளிந்து கொண்டே இருந்தாள்...

பார்க் வருவத்ற்குள் ஏதோ சந்தேகத்தில் பையை திறந்துபார்த்தேன்..கேஸ்பேக் கானோம்...சந்தேகமே இல்லை....இவள்தான் காலாலேயே எத்தி எடுத்திருக்கிறாள் என்று பட்டது...

“ என் பேக காணொம்...நீதான் எடுத்திருக்கிறாய்....மரியாதையாக் குடுத்திரு” ...ன்னு சத்தம் போட்டேன்....

கண்டக்டர் எங்கள் இருவரையும் ஒருமுறை நிமிர்ந்துபார்த்துவிட்டு கடமையே கண்ணாக....???? டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்...

அவள் ”என்ன இந்தம்மா லூஸ் மாதிரி பேசுது”என்று யாரையோ பார்த்து சொன்னாள்....எனக்கு கோபம் வந்துவிட்டது.......நான் விடவில்லை...”நானாடி லூசு....வா போலீஸ் ஸ்டேசன் போகலாம்”எத்தனி பேருடி இருக்கிறீங்க பஸ்ஸுக்குள்ள” என்றேன்...

அவளையும், உடன் வந்தவளையும் புடைவையை உதறிக்காட்டச்சொன்னேன்.....ஒன்றும் இல்லை....இனி என்ன செய்வது....

“டிரைவர் வண்டியை ஸ்டேசன்ல நிறுத்துங்க...கண்டிப்பா என் பேக பஸ்ஸுக்குள்ளதான் இருக்குது யார்கிட்டயோ...”. 

அதில இப்பகட்டுன பேங்க ரசீது மட்டும்தான் இருக்குது.....பணமெல்லாம் இல்லை...செக் பண்ணிடலாம்” என்று சப்தம் போட்டேன்..

அமைதியோ அமைதி....இரண்டு நிமிடத்தில் நாலுசீட் பின்னால் இருந்த ஒரு பெண் சத்தம் போட்டார்...”ஒரு பேக் இங்க கிடக்குது....உங்களுதா பர்ருங்க”

என் பேக்கேதான்....எப்படி கை மாத்திருக்காங்காங்க..பாருங்க...பணம் ஒன்றும் இல்லை...என்றதும் கீழே வீசிட்டாங்க.....யோசித்துப்பார்த்தேன்...கிடைச்சுருச்சு...இனி என்னானு புகார் தருவது...

சாட்சி யாருன்னு கேட்பாங்களோ...ஒருத்தரும் வரமாட்டாங்க...பேக கிடைத்த நிம்மதியுடன் அமைதியாகிவிட்டேன்...அலட்டிக்காம அவங்களும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிப்போய்ட்டாங்க...

டிஸ்கி:...இதனால் தெரிந்துகொள்ளவேண்டிய நீதி என்னவென்றால் பிக் சாப்பரில் பர்ஸ் போன்ற பொருள்களை வைக்காதீங்க...பெண் திருடிகளும் நிறைய இருக்காங்க...அவங்க தனியா வரமாட்டாங்க.. எடுத்ததும் அடுத்த ஆளுக்கு கை மாத்திடறாங்க.. அது பஸ் ஆக இருந்ததாலும் நான் உடனே பார்த்துவிட்டதாலும் பரவாயில்லை...

இதுவே பொது இடங்கள் நெருக்கமான விழாக்கூட்டங்கள் போன்றவற்றில் நாம்தான் ஜாகிரதையாக இருக்கவேண்டும்..அடிக்கடி நம் நகைகள் கழுத்தில் இருக்கிறதா என்று செக் செய்யவேண்டும்...சிறு குழந்தைகளுக்கு நகைகள் அணிந்து எடுத்துச் செல்வதை தவிர்க்கவேண்டும்..

 பஸ்களில் இதுபோல் நடந்தால், .சந்தேகப்பட்டால் சும்மாவாச்சும் போலீஸ்....போலீஸ் என்று கூவுங்கள்...நிஜமாவே அவங்க திருடவில்லை என்றால் என்ன உண்டு இல்லை என்று பண்ணியிருப்பாங்கதானே...மொசப்புடிக்கிற நாய மூஞ்சியப்பார்த்தா தெரியாதா என்று கவுண்டமணி ஒரு படத்துல சொல்லுவார்....அத வொர்கவுட் பண்ணிப் பார்த்தேன்..நிஜமாப்போச்சு.......

அதேமாதிரி பஸ் நிறுத்தத்தில் நிற்கும்போது நம்மை இடித்துக்கொண்டு பதினைந்துவயது பசங்கள் பெண்கள் வழியில் ஏறுவார்கள்....அவ்ர்களின்குறியும் இதே பிக்சாப்பர்தான்...படக்கென்று கைவிடுவார்கள்...நாம் உசாராக என்னவென்று கேட்டால் தெரியாமல் பட்டுருச்சு என்று சொல்லி சட் என்று அந்த இடத்த விட்டு நகர்ந்து விடுவார்கள்.....சும்மாவா சொன்னாங்க...தூங்கும்போதுகூட கால ஆட்டிக்கிட்டு தூங்கணும்....இல்லாவிட்டால் அதோகதிதான்...

Sunday, August 8, 2010

கண்ணாடி மனசு

இறந்துவிட்டது பாம்பு....

கடிபட்டதை சொல்லிக்கொண்டே இருக்கிறது வடு...


ஆட்டுக்குத்தெரியுமா...

வருபவன்....மீட்பனா,.....வெட்டுபவனா என்று...

Wednesday, July 21, 2010

ம்கனிடம் சுட்ட குறும்படம்.....நடந்த்து... என்ன.....என்ன....

http://www.youtube.com/watch?v=PyyUjntDmCY

மேலே உள்ள தொடுப்பைக் கிளிக் பண்ணிப்பாருங்கள்..
..என்ன ட்விஸ்ட்..??? நல்ல டைரக்சன்.... டைரக்டர் நளன்..

பாருங்க..பாருங்க.



.

Tuesday, July 20, 2010

எளிமையான எம்.எல்.ஏ...